கதவடைப்பு செய்யப்பட்ட நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை சூலூரில் உள்ள தனியார் (டி.டி.எல்) வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் கதவடைப்பு செய்ததை கண்டித்தும், நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் மையத்தை கதவடைப்பு செய்த நிர்வாகம், அதில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர். முன்னறிவிப்பின்றி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கிலோ மீட்டர் தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் காரணமாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான பெண் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடனும், அவர்களுடன் வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினருடனும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...