வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டான் மோர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோவை: தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்கு கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஆறுகளில் குளிப்பதற்காக கூழாங்கல் ஆறு, வெள்ள மலை ஆறு, வெள்ளமலை சுரங்க கால்வாய் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும், நல்ல முடி, பூஞ்சோலை, சோலையாறு அணை, டைகர் வாலி ஆகிய காட்சிமுனை பகுதிகளுக்குச் சென்று ரசித்து மகிழ்கின்றனர். மேலும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடும்பத்துடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.
இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் நிரம்பி உள்ளன. ரூம்கள் கிடைக்காதவர்கள் வாகனங்களில் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர். ஹோட்டல்கள் பேக்கரிகளில் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டான் மோர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்கு கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஆறுகளில் குளிப்பதற்காக கூழாங்கல் ஆறு, வெள்ள மலை ஆறு, வெள்ளமலை சுரங்க கால்வாய் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும், நல்ல முடி, பூஞ்சோலை, சோலையாறு அணை, டைகர் வாலி ஆகிய காட்சிமுனை பகுதிகளுக்குச் சென்று ரசித்து மகிழ்கின்றனர். மேலும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடும்பத்துடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.
இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் நிரம்பி உள்ளன. ரூம்கள் கிடைக்காதவர்கள் வாகனங்களில் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர். ஹோட்டல்கள் பேக்கரிகளில் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டான் மோர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.