திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் ஆயுத பூஜை அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், ஆயுத பூஜைக்காக, கடந்த இரண்டு நாட்களாகத் திருப்பூர் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து பனியன் குப்பைகளும் இந்த சாலையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆயுத பூஜைக்காக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைகளும் இங்கு மழை மழையாய் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் ஆயுத பூஜை அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், ஆயுத பூஜைக்காக, கடந்த இரண்டு நாட்களாகத் திருப்பூர் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து பனியன் குப்பைகளும் இந்த சாலையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆயுத பூஜைக்காக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைகளும் இங்கு மழை மழையாய் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.