குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான உதகை மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்..!

கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.


கோவை: கனமழை காரணமாக கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது. மலை முகடுகளிடையே, பல்வேறு குகைகளையும் தாண்டி இயற்கை அழகை ரசித்தபடி இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிறன்று பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயுள்ள மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனால், உதகை மலை ரயில் சேவை கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையில் ஏற்பட்ட மண் சரிவினை ரயில்வே ஊழியர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் சீர் செய்தனர்.



இதனையடுத்து, மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. வழக்கம் போல், காலை 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச்சென்றது.



சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். சிலர் ரயில் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் குதூகலத்துடன் சப்தமிட்டும், ஆரவாரமிட்டும் மகிழ்ந்தனர்.

முன்னதாக, இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களால் மலை ரயில் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புறப்பட்டுச் சென்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...