கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.
கோவை: கனமழை காரணமாக கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது. மலை முகடுகளிடையே, பல்வேறு குகைகளையும் தாண்டி இயற்கை அழகை ரசித்தபடி இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிறன்று பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயுள்ள மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால், உதகை மலை ரயில் சேவை கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையில் ஏற்பட்ட மண் சரிவினை ரயில்வே ஊழியர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் சீர் செய்தனர்.

இதனையடுத்து, மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. வழக்கம் போல், காலை 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச்சென்றது.

சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். சிலர் ரயில் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் குதூகலத்துடன் சப்தமிட்டும், ஆரவாரமிட்டும் மகிழ்ந்தனர்.
முன்னதாக, இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களால் மலை ரயில் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புறப்பட்டுச் சென்றது.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது. மலை முகடுகளிடையே, பல்வேறு குகைகளையும் தாண்டி இயற்கை அழகை ரசித்தபடி இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிறன்று பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயுள்ள மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால், உதகை மலை ரயில் சேவை கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையில் ஏற்பட்ட மண் சரிவினை ரயில்வே ஊழியர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் சீர் செய்தனர்.
இதனையடுத்து, மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. வழக்கம் போல், காலை 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச்சென்றது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். சிலர் ரயில் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் குதூகலத்துடன் சப்தமிட்டும், ஆரவாரமிட்டும் மகிழ்ந்தனர்.
முன்னதாக, இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களால் மலை ரயில் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புறப்பட்டுச் சென்றது.