கோவை தொண்டாமுத்தூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை..!

தொண்டாமுத்தூர் அருகே பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே பூண்டி வனப்பகுதியில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வனப்பகுதியில் உள்ள புளிய மரத்தில், துாக்கில் தொங்கிய படி, அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கண்டனர்.

இது குறித்து தகவலறிந்த ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சடலத்தின் அருகில் இருந்த ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது.

விசாரணையில் உயிரிழந்தவர் திருப்பூரை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...