கோவை ஆர்.எஸ். புரம் அருகே வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு. திருநங்கை உட்பட 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் மற்றும் ரூ. 1000 பணத்தை பறித்துக் கொண்டு சுல்தான் (29) மற்றும் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் ஆர்.எஸ். புரம் அருகே உள்ள அன்பகம் வீதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி வயது 29, தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு, இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்ய, விநாயகமூர்த்தி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர் அவரை வ.உ.சி மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, விநாயகமூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி மைதானத்தில் இறக்கிவிட்டு விட்டு, பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் விநாயகமூர்த்தி மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்துள்ளார். பின், அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், இருவரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து, விநாயகமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பணம் பறித்த போத்தனூரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29) மற்றும் அவர் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...