கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் மற்றும் ரூ. 1000 பணத்தை பறித்துக் கொண்டு சுல்தான் (29) மற்றும் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் ஆர்.எஸ். புரம் அருகே உள்ள அன்பகம் வீதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி வயது 29, தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு, இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
அவருக்கு உதவி செய்ய, விநாயகமூர்த்தி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர் அவரை வ.உ.சி மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, விநாயகமூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி மைதானத்தில் இறக்கிவிட்டு விட்டு, பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் விநாயகமூர்த்தி மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்துள்ளார். பின், அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், இருவரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து, விநாயகமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பணம் பறித்த போத்தனூரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29) மற்றும் அவர் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவருக்கு உதவி செய்ய, விநாயகமூர்த்தி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர் அவரை வ.உ.சி மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, விநாயகமூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி மைதானத்தில் இறக்கிவிட்டு விட்டு, பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் விநாயகமூர்த்தி மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்துள்ளார். பின், அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், இருவரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து, விநாயகமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பணம் பறித்த போத்தனூரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29) மற்றும் அவர் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.