கோவை ஆர்.எஸ். புரம் அருகே வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு. திருநங்கை உட்பட 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் மற்றும் ரூ. 1000 பணத்தை பறித்துக் கொண்டு சுல்தான் (29) மற்றும் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் ஆர்.எஸ். புரம் அருகே உள்ள அன்பகம் வீதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி வயது 29, தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு, இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்ய, விநாயகமூர்த்தி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர் அவரை வ.உ.சி மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, விநாயகமூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி மைதானத்தில் இறக்கிவிட்டு விட்டு, பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் விநாயகமூர்த்தி மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்துள்ளார். பின், அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், இருவரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து, விநாயகமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பணம் பறித்த போத்தனூரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29) மற்றும் அவர் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...