கோவை ஆட்சியர் வளாகத்தில் நிரந்தரப் புகைப்பட கண்காட்சி அரங்கினை செய்தித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்..!

மேலும், சர்வேத பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்கள் கண்காட்சியை அமைச்சர் துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் அரசின் நிகழ்வுகளை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புகைப்பட கண்காட்சி அரங்கினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



அதனை தொடர்ந்து, இன்று சர்வேத பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வைக்கு கண்காட்சியில் வைத்திருந்தனர். அந்த நிகழ்வினை துவக்கி வைத்து செய்தித் துறை அமைச்சர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார்.



பின்னர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வெற்றியானது முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்டங்களுக்கும் அவரின் உதவிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. நீதிமன்ற உத்தரவின் படி தனிநபர் ஆணையத்தினை அமைத்து, அதன் மூலம் பத்திரிகையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடக்க வழிவகை செய்துள்ளோம். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் குழு அமைக்கப்பட இருக்கின்றது என்றார்.

இதில் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன், கோவை மாவட்ட ஆய்வாளர் ராஜகோபால் சுங்கரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...