கோவையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆணையாளர்‌ வழங்கினார்‌.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்கள்‌. இதில், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்கள்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (12.10.2021) குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ 42வது வார்டுக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தைத் துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,

கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்ட முகாமில்‌ 21 ஸ்டால்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. இதில்‌ கண்‌, மூக்கு சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்‌, கோவிட்‌ தடுப்பூசி, கோவிட்‌ பரிசோதனை, பல்வேறு சிகிச்சைகள்‌ மற்றும்‌ மருத்துவ பரிசோதனைகளுக்கான ஸ்டால்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின்‌ மூலம்‌ இலவச இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட்‌, இ.சி.ஜி மற்றும்‌ எக்கோ பரிசோதனைகளும்‌ செய்யப்படும்‌. மருத்துவ பரிசோதனைக்குப்‌ பின்னர்‌ முகாமிலேயே முதல்‌ சிகிச்சையும்‌, மருந்துகளும்‌ இலவசமாக வழங்கப்படும்‌.

பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்க்கான சிகிச்சையும்‌, ஆலோசனையும்‌ பெற்று வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்.

இச்சிறப்பு முகாமில்‌ மாவட்ட சுகாதாரப்பணிகள்‌ துணை இயக்குநர்‌ அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, உதவி நகாநல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்‌ பாஸ்கர்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...