கொரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மகப்பேறு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் இ. சந்திரா கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள், செவிலியா் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவையில் தற்போது நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றாா்.
கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மகப்பேறு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் இ. சந்திரா கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள், செவிலியா் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவையில் தற்போது நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றாா்.