கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்..!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மகப்பேறு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் இ. சந்திரா கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள், செவிலியா் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவையில் தற்போது நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றாா்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...