கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மனமுடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: கோவையில் கருப்பு பூஞ்சை பாதித்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குருடம்பாளையம் லஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவனேசன்(41). இவர் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் நகை டிசைன் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரானா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்பு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த சிவனேசன் நேற்று கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குருடம்பாளையம் லஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவனேசன்(41). இவர் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் நகை டிசைன் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரானா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்பு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த சிவனேசன் நேற்று கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.