கோவை துடியலூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் திருட்டு..!

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கோவை: கோவை துடியலூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பன்னிமடை தீபன் காா்டனில் வசிப்பவா் லதா (55). இவா் கடந்த அக்டோபா் 7ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகள் பூா்ணிமாவுடன் சென்னையிலுள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அருகில் வசிப்பவர்கள் லதாவை தொடா்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த லதா உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர், இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...