கோவையில் மாமியாரின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய மருமகன்.!!!

கோவையில் மாமியார் குளிக்கும்போது படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மராட்டிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் மாமியார் குளிக்கும்போது படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மராட்டிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் சுண்டபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (56). இவர் பீளமேடு பகுதியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது இளையமகள் ரேவதிக்கும் சென்னையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் மனோஜ் (36) என்பவருக்கும் கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனோஜ் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

2016-ம் ஆண்டு மனோஜும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதுகுறித்து ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ரேவதி கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரசவத்திற்காகக் கோவை அரசு புரம் பகுதியில் உள்ள தந்தை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் மனோஜ் ஆன்லைன் மூலம் வேலை செய்வதற்காக கோவையிலுள்ள மாமனார் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

ஏற்கனவே மனோஜும் அவரது மாமனார் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனால் மனோஜ் மாமனார் குடும்பத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மாமனார் குடும்பத்தைப் பழிவாங்க மனோஜ் திட்டம் தீட்டினார்.

இதற்காக அவரது மாமியார் குளிக்கும் பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி உள்ளார். பின்னர் அவர் குளிக்கும் பொழுது போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மாமனார் பாலகிருஷ்ணன் குடும்பத்தை மனோஜ் மிரட்டியுள்ளார்.

இதனால் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பாலகிருஷ்ணன் ஆர்.எஸ். புரம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மனோஜ் மாமியாரின் ஆபாச படங்களை மொபைல் போனில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாமியாரின் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டிய மனோஜ் (36) மற்றும் போட்டோ எடுத்து மிரட்டுவதற்குத் தூண்டுதலாக இருந்த அவரது தந்தை தர்மராஜ், தாயார் கோமதி, சகோதரி சுகன்யா மற்றும் கார்த்திக் ஆகிய 5-பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...