மேலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுத்திட வீடு வீடாக சளி, காய்ச்சல் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகராட்சி மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைக் கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்பரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகராட்சி மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைக் கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்பரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.