வால்பாறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட புலி மேல் சிகிச்சைக்காக இடமாற்றம்..!

வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.


கோவை: கோவை வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடிஷ் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் பிடித்து ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

புலி ஆண் புலி என்பதும் 8 மாதம் ஆன குட்டிப்புலி என்பதும் தெரியவந்தது. புலிக்கு சிகிச்சை அளிக்க திருநெல்வேலியிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்கு மருத்துவர் மற்றும் பேராசிரியர் தலைமையில் குழு அமைத்து புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முள் குத்தியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முள்ளம்பன்றியை வேட்டையாடும் பொழுது முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இந்த சிகிச்சையில், புலியின் உடலிலிருந்து முள்ளம்பன்றி முட்களை எடுத்தனர். மருந்துகள் செலுத்தியும், இறைச்சிகள் வழங்கியும் உடல்நிலையை சரி செய்தனர்.

இந்நிலையில், புலியினை சிறிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், புலியை பெரிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இரவு புலியை மானாம்பள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரிய கூண்டு அமைத்து வனப்பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...