வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.
கோவை: கோவை வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடிஷ் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் பிடித்து ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
புலி ஆண் புலி என்பதும் 8 மாதம் ஆன குட்டிப்புலி என்பதும் தெரியவந்தது. புலிக்கு சிகிச்சை அளிக்க திருநெல்வேலியிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்கு மருத்துவர் மற்றும் பேராசிரியர் தலைமையில் குழு அமைத்து புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முள் குத்தியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முள்ளம்பன்றியை வேட்டையாடும் பொழுது முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த சிகிச்சையில், புலியின் உடலிலிருந்து முள்ளம்பன்றி முட்களை எடுத்தனர். மருந்துகள் செலுத்தியும், இறைச்சிகள் வழங்கியும் உடல்நிலையை சரி செய்தனர்.
இந்நிலையில், புலியினை சிறிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், புலியை பெரிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இரவு புலியை மானாம்பள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரிய கூண்டு அமைத்து வனப்பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடிஷ் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் பிடித்து ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
புலி ஆண் புலி என்பதும் 8 மாதம் ஆன குட்டிப்புலி என்பதும் தெரியவந்தது. புலிக்கு சிகிச்சை அளிக்க திருநெல்வேலியிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்கு மருத்துவர் மற்றும் பேராசிரியர் தலைமையில் குழு அமைத்து புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முள் குத்தியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முள்ளம்பன்றியை வேட்டையாடும் பொழுது முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த சிகிச்சையில், புலியின் உடலிலிருந்து முள்ளம்பன்றி முட்களை எடுத்தனர். மருந்துகள் செலுத்தியும், இறைச்சிகள் வழங்கியும் உடல்நிலையை சரி செய்தனர்.
இந்நிலையில், புலியினை சிறிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், புலியை பெரிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இரவு புலியை மானாம்பள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரிய கூண்டு அமைத்து வனப்பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.