சந்தோஷின் பெற்றோர் மற்றும் அவரது நண்பரிடமும் NIA போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தேடப்பட்டு வந்த பெரும் மாவோயிஸ்ட் சந்தோஷ் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் (NIA) தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக அவரது தந்தை அர்ஜூனன் ஆழியாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் இது தொடர்பாக கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம், நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, சந்தோஷின் பெற்றோரிடம் அவரை சரண் அடையுமாறு தெரிவித்துள்ளனர். மேலும், சந்தோஷின் நண்பரிடமும், NIA போலீசார் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கலக்குறிச்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக அவரது தந்தை அர்ஜூனன் ஆழியாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் இது தொடர்பாக கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம், நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, சந்தோஷின் பெற்றோரிடம் அவரை சரண் அடையுமாறு தெரிவித்துள்ளனர். மேலும், சந்தோஷின் நண்பரிடமும், NIA போலீசார் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கலக்குறிச்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.