கோவை சைல்டுலைன் 1098, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் சார்பில், பொள்ளாச்சி, பெரிய நெகமம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கோவை: பொள்ளாச்சி அடுத்த வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய நெகமம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று அனுசரிக்கப்பட்டது.
கோவை சைல்டுலைன் 1098, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் சார்பில், பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி பேசினார். விழிப்புணர்வு கூட்ட கருத்தரங்கில், சமூக நலத்துறை சார்பாக குழந்தை திருமணம் பற்றியும், அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரிய நெகமம் காவல்துறை அலுவலர்கள், மனோரஞ்சிதம் மற்றும் முத்து கல்யானி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி, பெண் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் பற்றி பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர்.
கோவை சைல்டுலைன் 1098, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் சார்பில், பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி பேசினார். விழிப்புணர்வு கூட்ட கருத்தரங்கில், சமூக நலத்துறை சார்பாக குழந்தை திருமணம் பற்றியும், அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரிய நெகமம் காவல்துறை அலுவலர்கள், மனோரஞ்சிதம் மற்றும் முத்து கல்யானி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி, பெண் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் பற்றி பேசினர்.
நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர்.