உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக, பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி தேர்தலுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தினத்தன்று, வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் அவரது கணவர் அவர் பேரில் வாக்கு செலுத்தியதா, பா.ஜ.க சார்பில் புகார்.


திருப்பூர்: கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக, பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம், இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10 வது வார்டுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கேயம் ஒன்றியத்தில் 10 ஊராட்சியும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 4 ஊராட்சியை சேர்ந்த மக்களும் இதில் வாக்களித்துள்ளனர். தேர்தலில், திமுக சார்பில் கிருஷ்ணவேணி என்பவரும், அதிமுக சார்பில் லட்சுமி சோமசுந்திரம் என்பவரும், நா.த.க உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால், தேர்தல் தினத்தன்று, அவரின் வாக்கை கிருஷ்ணவேணியின் கணவரே பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் செலுத்தியாக பா.ஜ.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பாக உரிய விசாரனை நடத்தக்கோரியும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரியும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...