திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி தேர்தலுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தினத்தன்று, வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் அவரது கணவர் அவர் பேரில் வாக்கு செலுத்தியதா, பா.ஜ.க சார்பில் புகார்.
திருப்பூர்: கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக, பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம், இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10 வது வார்டுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கேயம் ஒன்றியத்தில் 10 ஊராட்சியும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 4 ஊராட்சியை சேர்ந்த மக்களும் இதில் வாக்களித்துள்ளனர். தேர்தலில், திமுக சார்பில் கிருஷ்ணவேணி என்பவரும், அதிமுக சார்பில் லட்சுமி சோமசுந்திரம் என்பவரும், நா.த.க உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால், தேர்தல் தினத்தன்று, அவரின் வாக்கை கிருஷ்ணவேணியின் கணவரே பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் செலுத்தியாக பா.ஜ.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பாக உரிய விசாரனை நடத்தக்கோரியும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரியும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10 வது வார்டுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கேயம் ஒன்றியத்தில் 10 ஊராட்சியும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 4 ஊராட்சியை சேர்ந்த மக்களும் இதில் வாக்களித்துள்ளனர். தேர்தலில், திமுக சார்பில் கிருஷ்ணவேணி என்பவரும், அதிமுக சார்பில் லட்சுமி சோமசுந்திரம் என்பவரும், நா.த.க உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால், தேர்தல் தினத்தன்று, அவரின் வாக்கை கிருஷ்ணவேணியின் கணவரே பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் செலுத்தியாக பா.ஜ.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பாக உரிய விசாரனை நடத்தக்கோரியும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரியும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.