தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
கோவை: தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம் தான் நாடு முழுவதும் கொரோனா காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போடப்பட்டது.
கேரளப் பகுதிகளிலிருந்து கோமாரி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள முள்ளி, ஆனைகட்டி, மேல்பாவி, வேலன் தாவளம், வாளையாறு உள்ளிட்ட இடங்களைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே கையிருப்பிலிருந்த தடுப்பூசிகளைக் கொண்டு 7-ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பவர்கள் மழைக்காலங்களில் நோய் தொற்று வராமல் கவனமாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள புல்தரையில் மாடுகளை மேய விட கூடாது. மழை பெய்யும்போது மரத்தடியில் கட்டிப் போடக் கூடாது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம் தான் நாடு முழுவதும் கொரோனா காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போடப்பட்டது.
கேரளப் பகுதிகளிலிருந்து கோமாரி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள முள்ளி, ஆனைகட்டி, மேல்பாவி, வேலன் தாவளம், வாளையாறு உள்ளிட்ட இடங்களைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே கையிருப்பிலிருந்த தடுப்பூசிகளைக் கொண்டு 7-ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பவர்கள் மழைக்காலங்களில் நோய் தொற்று வராமல் கவனமாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள புல்தரையில் மாடுகளை மேய விட கூடாது. மழை பெய்யும்போது மரத்தடியில் கட்டிப் போடக் கூடாது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.