கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் சாலைவரி கட்டாமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இன்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான சொக்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது சாலை வரி கட்டாமல் இருப்பதும், அதேபோல் கேரளா என் பதிவு கொண்ட ஆட்டோ ஒன்று தமிழகப் பகுதியில் பர்மிட் இல்லாமல் சென்று வருவதும், டாட்டா ஏசி வாகனம் ஒன்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் வடக்கிபாளையம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனை செய்ததில் அந்த லாரிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, உரிய ஆவணம் இல்லாமல் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்ட 5-வாகனங்களும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் சாலைவரி கட்டாமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இன்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான சொக்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது சாலை வரி கட்டாமல் இருப்பதும், அதேபோல் கேரளா என் பதிவு கொண்ட ஆட்டோ ஒன்று தமிழகப் பகுதியில் பர்மிட் இல்லாமல் சென்று வருவதும், டாட்டா ஏசி வாகனம் ஒன்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் வடக்கிபாளையம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனை செய்ததில் அந்த லாரிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, உரிய ஆவணம் இல்லாமல் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்ட 5-வாகனங்களும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.