கிணத்துக்கடவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் சாலைவரி கட்டாமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இன்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான சொக்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது சாலை வரி கட்டாமல் இருப்பதும், அதேபோல் கேரளா என் பதிவு கொண்ட ஆட்டோ ஒன்று தமிழகப் பகுதியில் பர்மிட் இல்லாமல் சென்று வருவதும், டாட்டா ஏசி வாகனம் ஒன்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் வடக்கிபாளையம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனை செய்ததில் அந்த லாரிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, உரிய ஆவணம் இல்லாமல் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்ட 5-வாகனங்களும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...