பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இருவர் பலி..!

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் வடமாநில தொழிலாளர் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் (20), ரிஷிராம் (22) இருவரும், நேற்று மாலை, பல்லடத்தில் இருந்து- கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். ரிஷிராம் இருசக்கர வாகனத்தை ஓட்ட, ஸ்ரீராம் பின்னால் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு நடந்து வந்த கள்ளக்கிணற்றில் உள்ள மில் ஒன்றில், தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கிஷன்சிங் (64) என்ற வட மாநில தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...