பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இருவர் பலி..!

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் வடமாநில தொழிலாளர் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் (20), ரிஷிராம் (22) இருவரும், நேற்று மாலை, பல்லடத்தில் இருந்து- கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். ரிஷிராம் இருசக்கர வாகனத்தை ஓட்ட, ஸ்ரீராம் பின்னால் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு நடந்து வந்த கள்ளக்கிணற்றில் உள்ள மில் ஒன்றில், தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கிஷன்சிங் (64) என்ற வட மாநில தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீராம் மற்றும் கிஷன்சிங் ஆகியோர் பலியாயினர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...