கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்த வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 83-பைகளில் தலா 50-கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
கோவை: கேரளாவிற்குக் கடத்த வைத்திருந்த 4-டன் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார், கோவை அருகே உள்ள ராமநாதபுரம் சிவராமன் நகரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 83 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ஆண்டிபட்டியைப் பூர்விகமாக கொண்ட முருகன் (49) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய சிவா (21) என்பவரைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கேரளாவிற்குக் கடத்த பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.