கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம், சீர் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் மாத ஓய்வூதியம், அதே போல் இசை கருவிகள் வழங்கவும், முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம், சீர் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் மாத ஓய்வூதியம், அதே போல் இசை கருவிகள் வழங்கவும், முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.