காங்கேயம் சுற்றுவட்டார கிராம பகுதியில் புதிதாக இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு!

முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார கிராம பகுதியில் புதிதாக இரும்பு தொழிற்சாலை அமைக்க 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணர், கண்ணாங்கோவில் ஆகிய 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வடுகபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக இரும்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. 



ஆனால், இரும்பாலை அமைக்க முறைகேடாக அனுமதி வாங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், தொழிற்சாலை சட்டங்களின்படி முறையாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும், இரும்பாலை அமையும் பட்சத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...