கல்லாங்காடுபுதூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது கோவையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா சாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநரான சின்னசாமி. இவருக்கு தீபக் (25)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் தீபக் கிணத்துக்கடவு அடுத்து கல்லாங்காடுபுதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள ரோட்டில் இடைவெளியில் தீபக் இருசக்கர வாகத்தில் ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் கோவையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தீபக் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார், தீபக் உடலை மீட்டு ஆம்புலன்சிஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரை ஓட்டி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது அந்த நபர் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (46) என்பதும், அவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் பொள்ளாச்சி செல்வதற்காக தனது தாய், மனைவியுடன் பொள்ளாச்சிக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் உள்ளவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா சாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநரான சின்னசாமி. இவருக்கு தீபக் (25)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் தீபக் கிணத்துக்கடவு அடுத்து கல்லாங்காடுபுதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள ரோட்டில் இடைவெளியில் தீபக் இருசக்கர வாகத்தில் ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் கோவையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தீபக் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார், தீபக் உடலை மீட்டு ஆம்புலன்சிஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரை ஓட்டி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது அந்த நபர் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (46) என்பதும், அவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் பொள்ளாச்சி செல்வதற்காக தனது தாய், மனைவியுடன் பொள்ளாச்சிக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் உள்ளவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.