வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய சம்பளத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் மூலம் வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பப் படுகிறது.
தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதில் எவ்வித உடன்பாடு எட்டப்படாத நிலையிலிருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வருகின்ற 16-ஆம் தேதி டாட்டா குரூப் ஆபீஸ் முன்புறம் தொழில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ அமீது, ஐஎன்டியூசி கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ முருகன், மதிமுக கல்யாணி, எல் பி எஃப் வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில், செல்லமுத்து இ.கம்.மாணிக்கம் உட்படத் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய சம்பளத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் மூலம் வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பப் படுகிறது.
தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதில் எவ்வித உடன்பாடு எட்டப்படாத நிலையிலிருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வருகின்ற 16-ஆம் தேதி டாட்டா குரூப் ஆபீஸ் முன்புறம் தொழில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ அமீது, ஐஎன்டியூசி கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ முருகன், மதிமுக கல்யாணி, எல் பி எஃப் வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில், செல்லமுத்து இ.கம்.மாணிக்கம் உட்படத் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.