தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்.!!

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய சம்பளத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் மூலம் வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பப் படுகிறது.

தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதில் எவ்வித உடன்பாடு எட்டப்படாத நிலையிலிருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் வருகின்ற 16-ஆம் தேதி டாட்டா குரூப் ஆபீஸ் முன்புறம் தொழில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ அமீது, ஐஎன்டியூசி கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ முருகன், மதிமுக கல்யாணி, எல் பி எஃப் வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில், செல்லமுத்து இ.கம்.மாணிக்கம் உட்படத் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...