கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக்கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகள் அந்த மருத்துவ கழிவுகளைத் தவறுதலாக உண்பதற்கு மற்றும் அவற்றின் கால்களில் அங்கு கொட்டபப்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஏறினால், உயிர்க் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள்..?என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் திணறி வரும் அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் இது போன்ற மருத்துவ கழிவுகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது, என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இது போன்று அத்துமீறி மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் லாரி ஓட்டுனர்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது போல் கோவை மாவட்டத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் பல்வேறு இடங்களை குறித்து வைத்து, மருத்துவ கழிவுகளை கொட்டிவரும் நபர்களை அடையாளம் காண சிறப்புப் படை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகள் அந்த மருத்துவ கழிவுகளைத் தவறுதலாக உண்பதற்கு மற்றும் அவற்றின் கால்களில் அங்கு கொட்டபப்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஏறினால், உயிர்க் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள்..?என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் திணறி வரும் அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் இது போன்ற மருத்துவ கழிவுகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது, என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இது போன்று அத்துமீறி மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் லாரி ஓட்டுனர்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது போல் கோவை மாவட்டத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் பல்வேறு இடங்களை குறித்து வைத்து, மருத்துவ கழிவுகளை கொட்டிவரும் நபர்களை அடையாளம் காண சிறப்புப் படை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.