கோவை செட்டிபாளையம் பகுதியில் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்; நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்.!!

கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக்கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகள் அந்த மருத்துவ கழிவுகளைத் தவறுதலாக உண்பதற்கு மற்றும் அவற்றின் கால்களில் அங்கு கொட்டபப்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஏறினால், உயிர்க் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.



யார் இந்த மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள்..?என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் திணறி வரும் அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் இது போன்ற மருத்துவ கழிவுகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது, என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்று அத்துமீறி மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் லாரி ஓட்டுனர்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இது போல் கோவை மாவட்டத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் பல்வேறு இடங்களை குறித்து வைத்து, மருத்துவ கழிவுகளை கொட்டிவரும் நபர்களை அடையாளம் காண சிறப்புப் படை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...