வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி.!!

வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்த கரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்தகரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இங்குயானை கரடி புலி சிறுத்தைஉட்பட, ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டான்மோர் தேயிலைத் தோட்டத்தில்கரடி ஒன்று உலா வந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அலறி அடித்து ஓடினர்.

அதேநேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை ஒன்று கரடியைத் துரத்தியது. காட்டெருமையைப் பார்த்த கரடி உயிர் பிழைக்க மரத்திலேறிப் பதுங்கிக் கொண்டது.



காட்டெருமைமரத்தினடியில் சுற்றி வந்ததால் கரடி மரத்தை விட்டு இறங்காமல் மரத்திலேயே பதுங்கி இருந்தது. இதைப்பார்த்த நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவைரவலாகி வருகிறது.

தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...