வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்த கரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.
வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்தகரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இங்குயானை கரடி புலி சிறுத்தைஉட்பட, ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டான்மோர் தேயிலைத் தோட்டத்தில்கரடி ஒன்று உலா வந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அலறி அடித்து ஓடினர்.
அதேநேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை ஒன்று கரடியைத் துரத்தியது. காட்டெருமையைப் பார்த்த கரடி உயிர் பிழைக்க மரத்திலேறிப் பதுங்கிக் கொண்டது.

காட்டெருமைமரத்தினடியில் சுற்றி வந்ததால் கரடி மரத்தை விட்டு இறங்காமல் மரத்திலேயே பதுங்கி இருந்தது. இதைப்பார்த்த நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவைரவலாகி வருகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இங்குயானை கரடி புலி சிறுத்தைஉட்பட, ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டான்மோர் தேயிலைத் தோட்டத்தில்கரடி ஒன்று உலா வந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அலறி அடித்து ஓடினர்.
அதேநேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை ஒன்று கரடியைத் துரத்தியது. காட்டெருமையைப் பார்த்த கரடி உயிர் பிழைக்க மரத்திலேறிப் பதுங்கிக் கொண்டது.
காட்டெருமைமரத்தினடியில் சுற்றி வந்ததால் கரடி மரத்தை விட்டு இறங்காமல் மரத்திலேயே பதுங்கி இருந்தது. இதைப்பார்த்த நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவைரவலாகி வருகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.