வால்பாறையில் கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்.!!

வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது புது தோட்டம் எஸ்டேட். இங்குள்ள பத்து ஏக்கர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் இயேசு (வயது-52). கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி, காவல் துறையினர் வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ள 10-ஏக்கர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யேசு (வயது-52) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது 3.700 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்,வால்பாறை புதுத்தோட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான யேசு என்பவரைக் கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...