வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது புது தோட்டம் எஸ்டேட். இங்குள்ள பத்து ஏக்கர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் இயேசு (வயது-52). கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி, காவல் துறையினர் வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ள 10-ஏக்கர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யேசு (வயது-52) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது 3.700 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்,வால்பாறை புதுத்தோட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான யேசு என்பவரைக் கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது புது தோட்டம் எஸ்டேட். இங்குள்ள பத்து ஏக்கர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் இயேசு (வயது-52). கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி, காவல் துறையினர் வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ள 10-ஏக்கர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யேசு (வயது-52) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது 3.700 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்,வால்பாறை புதுத்தோட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான யேசு என்பவரைக் கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.