கோவையில் செயின் பறித்த கொள்ளையர்களிடம் போராடிய பெண்; கீழே விழுந்து காயம்

கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.


கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கவுண்டம்பாளையம், கட்டாஞ்சி மலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனை கவனித்த நீலாவதி, அவரது மொபட்டை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, அவரை துரத்திச் சென்று அந்த இருவர், லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து நகையை காப்பாற்ற, நீலாவதி போராடியுள்ளார். இந்த போராட்டத்தில், நகையின் ஒரு பகுதி நீலாவதி கையில் சிக்கிக்கொண்டது. இருப்பினும், அந்த மர்ம நபர்கள், நீலாவதியின் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

தொடர்ந்து, அவரது ஒரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நீலாவதி காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த நீலாவதி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...