கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.
கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கவுண்டம்பாளையம், கட்டாஞ்சி மலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனை கவனித்த நீலாவதி, அவரது மொபட்டை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, அவரை துரத்திச் சென்று அந்த இருவர், லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து நகையை காப்பாற்ற, நீலாவதி போராடியுள்ளார். இந்த போராட்டத்தில், நகையின் ஒரு பகுதி நீலாவதி கையில் சிக்கிக்கொண்டது. இருப்பினும், அந்த மர்ம நபர்கள், நீலாவதியின் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
தொடர்ந்து, அவரது ஒரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நீலாவதி காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த நீலாவதி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கவுண்டம்பாளையம், கட்டாஞ்சி மலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனை கவனித்த நீலாவதி, அவரது மொபட்டை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, அவரை துரத்திச் சென்று அந்த இருவர், லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து நகையை காப்பாற்ற, நீலாவதி போராடியுள்ளார். இந்த போராட்டத்தில், நகையின் ஒரு பகுதி நீலாவதி கையில் சிக்கிக்கொண்டது. இருப்பினும், அந்த மர்ம நபர்கள், நீலாவதியின் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
தொடர்ந்து, அவரது ஒரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நீலாவதி காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த நீலாவதி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.