பூட்டிய வீடுகள் குறித்து தகவல் தெரிவிக்காத சரவணம்பட்டி, பீளமேடு போலீசாருக்கு நோட்டீஸ்...! ஆணையர் தீபக் தாமோர் நடவடிக்கை

சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகருக்கு உட்பட்ட 15 காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பகுதிகளில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி இருக்கும் வீடுகளைப் பார்த்தால், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சமீபத்தில், கோவையில் நடைபெற்ற 4-க்கும் மேற்பட்ட பெரிய கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...