கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!

இருவேறு பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் அவென்யூ பகுதியை சேர்ந்த தாமோதரசாமி என்பவரின் மகன் தனஞ்சை (38). இவர் திருச்சியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு இங்கு பூட்டிய நிலையில் இருந்துவந்தது.

இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் வேலைக்காரப் பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கதவு உடைந்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, தனஞ்சை கோவைக்கு வந்து வீட்டை பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம் மட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனஞ்சை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல, சரவணம்பட்டி அடுத்த அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் முத்து சரவணன் (39). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் முத்து சரவணன் சென்றர்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள், மோதிரம் என ஐந்தரை பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து முத்துசரவணன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...