பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சி துவக்கம்.!!

பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சியில் வரலாற்றுச் சிறப்பு மன்னர் மற்றும் நாயக்கர் காலத்தின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சியில் வரலாற்றுச் சிறப்பு மன்னர் மற்றும் நாயக்கர் காலத்தின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பகுதியில் ஆண்டு தோறும் நாணய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் பழங்கால நாணய கண்காட்சி பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இன்று முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ள இந்த நாணய கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய., மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் மதுரை நாயக்கர் காலத்து நாணயங்கள், தஞ்சாவூர் நாயக்கர் காலத்து நாணயங்கள், உள்ளிட்ட பழங்கால நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.



மேலும் ரிசர்வ் வங்கி தோன்றுவதற்கு முன்பே அப்போதைய இந்திய அரசால் 1918ல் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய்த் தாளில் பழமை மொழியான தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகள் அச்சிடப்பட்டிருந்ததும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1000ரூபாய்த் தாள், வெளியீடுகளின் பழங்கால ரூபாய்த் தாள்களும் இந்த கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.



அதுமட்டுமின்றி மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த பொருட்களும், அவர்களுடைய படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சியைப் பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். கண்காட்சிக்கு வந்த நாணய சேகரிப்பாளர்கள் கூறுகையில், இந்த பழங்கால நானையம் மற்றும் பழமை வாய்ந்த பொருட்களின் கண்காட்சியைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்த்து நம் வரலாறுகளைப் பற்றியும் நம் தமிழர் பெருமைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...