கோவை கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு..!

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பலூன்(Air bag) ஓபன் ஆனதால் லேசான காயங்களுடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் லாரியின் பின்பக்கமாக கார் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று இரவு பொள்ளாச்சி சென்றுவிட்டு காரில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.



தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் லாரியின் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் உள்ளேயிருந்த பலூன்(Airbag) ஓபன் ஆனதால் லேசான காயத்துடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

பின்னர், லாரி பின்புறம் சிக்கிய காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி - கோவை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...