கோவை கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு..!

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பலூன்(Air bag) ஓபன் ஆனதால் லேசான காயங்களுடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் லாரியின் பின்பக்கமாக கார் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று இரவு பொள்ளாச்சி சென்றுவிட்டு காரில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.



தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் லாரியின் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் உள்ளேயிருந்த பலூன்(Airbag) ஓபன் ஆனதால் லேசான காயத்துடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

பின்னர், லாரி பின்புறம் சிக்கிய காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி - கோவை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...