கோவையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பென்ட்..!

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுக்கள் வந்தன.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு நேற்று பல்வேறு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்பொழுது, காந்திபுரம் பகுதியில் கடை எண் 1616-இல் பணியாற்றும் மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் விற்பனையாளர் பாபு ஆகியோர் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக 40 விலை நிர்ணயம் செய்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு உத்தரவிட்டார்.

இது பற்றி கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு கூறுகையில்:-

விதி மீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே அரசின் வழிகாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

புகார்களுக்கு ஆளாகக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...