கோவை வழியாக ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்..!

ரயிலில் புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்றது குறித்து குற்றம் தடுப்பு மற்றும் கண்டறியும் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக செல்லக்கூடிய சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 45 கிலோ புகையிலைப் பொருட்களை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று திருப்பூர் - கோவை வழித்தடத்தில் செல்லும்போது, கோவை ரயில்வே பாதுகாப்பு படையால் அமைக்கப்பட்ட குற்றம் தடுப்பு மற்றும் கண்டறியும் பறக்கும் படையினர் (சி.பி.டி.எஸ்.,) சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் தனியே இருந்த பையை சோதனையிட்டபோது, ஒடிசாவில் தயாரிக்கப்பட்ட, 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...