கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் தகராறு - 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

மாநகராட்சி இடத்தை அபகரித்து காலி செய்ய மறுத்த, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் உட்பட 4 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவர் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றார்.

அப்போது, மாநகராட்சி இடத்தை அபகரித்து காலி செய்ய மறுத்த, அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் உட்பட 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்த முயன்றனர்.

இது தொடர்பாக ஜீவானந்தம் உட்பட 4 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...