திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது.
ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர்-8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு இன்று காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாகப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50- பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜும் பொதுமக்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.

மேலும், பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது.
ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர்-8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு இன்று காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாகப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50- பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜும் பொதுமக்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.
மேலும், பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.