திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தர்ணா.!!!

திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது.

ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர்-8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு இன்று காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாகப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50- பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜும் பொதுமக்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.



மேலும், பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...