ஆனைமலை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட சிறுவன் உட்பட 7 பேர் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள், அந்த செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன் பணமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.1000 மட்டுமே சம்பளமாக வழங்கி, இவர்களை அந்த செங்கல் சூளை உரிமையாளர், கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு, பிற இடங்களுக்கு பணிக்குச் சென்று வர விடாமல் தடுத்து வருவதாகவும், அவர்களுக்கு, போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, புகாரை கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் மீட்பு இயக்க திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, செங்கல் சூளையில் இன்று சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின், அந்த செங்கல் சூளையில் 13 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மீட்டப்பட்டு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பாதிக்கப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...