கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில், கடந்த ஆறு மாதங்களாக திருப்பூர் மாவட்டம் கணியூர் கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள், அந்த செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன் பணமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.1000 மட்டுமே சம்பளமாக வழங்கி, இவர்களை அந்த செங்கல் சூளை உரிமையாளர், கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு, பிற இடங்களுக்கு பணிக்குச் சென்று வர விடாமல் தடுத்து வருவதாகவும், அவர்களுக்கு, போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, புகாரை கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் மீட்பு இயக்க திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, செங்கல் சூளையில் இன்று சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின், அந்த செங்கல் சூளையில் 13 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மீட்டப்பட்டு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பாதிக்கப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இவர்கள், அந்த செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன் பணமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.1000 மட்டுமே சம்பளமாக வழங்கி, இவர்களை அந்த செங்கல் சூளை உரிமையாளர், கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு, பிற இடங்களுக்கு பணிக்குச் சென்று வர விடாமல் தடுத்து வருவதாகவும், அவர்களுக்கு, போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, புகாரை கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் மீட்பு இயக்க திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, செங்கல் சூளையில் இன்று சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின், அந்த செங்கல் சூளையில் 13 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மீட்டப்பட்டு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பாதிக்கப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.