வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது.!!

காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.


வால்பாறை: காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா விற்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துறையினரால் காமராஜ் நகர்ப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள தாஸ் என்பவர் வீட்டைச் சோதனையிட்ட போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தாஸ் வயது 50. ஏற்கனவே இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறையிலிருந்து வந்தார்.

தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அடங்கிய காவல்துறையினர் அவரை வால்பாறை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வால்பாறை காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து தாஸ் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...