வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது.!!

காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.


வால்பாறை: காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா விற்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துறையினரால் காமராஜ் நகர்ப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள தாஸ் என்பவர் வீட்டைச் சோதனையிட்ட போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தாஸ் வயது 50. ஏற்கனவே இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறையிலிருந்து வந்தார்.

தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அடங்கிய காவல்துறையினர் அவரை வால்பாறை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வால்பாறை காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து தாஸ் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...