பழங்குடியின மக்களுக்கு இடம் தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு.!!

பழங்குடியின மக்களுக்கு 2006-சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு.



கோவை: பழங்குடியின மக்களுக்கு 2006 -சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது கல்லாறு குடி பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தில் 23-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த, 2018-ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு, இந்த செட்டில்மென்ட் பகுதியில், வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.

இதனையடுத்து, பழங்குடியின மக்கள் 2006-வனச்சட்டப்படி தெப்பக்குளமோடு பகுதியில் வசிக்க இடம் தரக்கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் போராட்டங்களையும் நடத்தினர். கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் பழங்குடியின மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் தெப்பக்குளம் மேடு பகுதியில் நில அளவை செய்தனர்.



நில அளவை செய்து ஓராண்டாகியும் வீடு கட்ட இடம் வழங்காததால், கடந்த 5-நாட்களாக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு 2006 -சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர், ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து, வனச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்காமல், பழங்குடியின சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்ததாகக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...