கள்ளச்சாராயத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பொதுமக்களிடையே மேள தாளத்துடன் பாட்டு பாடி கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வயது வரம்பின்றி அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் அவல நிலை உருவாகி உள்ளது. மதுபானம் கிடைக்காத பட்சத்தில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இதை கண்காணிக்க மதுவிலக்கு துறையை உருவாக்கி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கள்ளச்சாராய விற்பனையை இன்னும் பல இடங்களில் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

எனவே, இந்த நிலையை மாற்றும் நோக்கத்தோடு கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணைத்து மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்தது.
இதில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மேள தாலங்களுடன் பாடல் பாடி ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு வாசகம் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வயது வரம்பின்றி அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் அவல நிலை உருவாகி உள்ளது. மதுபானம் கிடைக்காத பட்சத்தில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இதை கண்காணிக்க மதுவிலக்கு துறையை உருவாக்கி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கள்ளச்சாராய விற்பனையை இன்னும் பல இடங்களில் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
எனவே, இந்த நிலையை மாற்றும் நோக்கத்தோடு கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணைத்து மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்தது.
இதில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மேள தாலங்களுடன் பாடல் பாடி ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு வாசகம் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.