வால்பாறையில் பொதுமக்களிடையே மேள தாளத்துடன் பாட்டு பாடி கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..!!

கள்ளச்சாராயத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பொதுமக்களிடையே மேள தாளத்துடன் பாட்டு பாடி கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வயது வரம்பின்றி அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் அவல நிலை உருவாகி உள்ளது. மதுபானம் கிடைக்காத பட்சத்தில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இதை கண்காணிக்க மதுவிலக்கு துறையை உருவாக்கி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கள்ளச்சாராய விற்பனையை இன்னும் பல இடங்களில் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.



எனவே, இந்த நிலையை மாற்றும் நோக்கத்தோடு கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணைத்து மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்தது.

இதில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மேள தாலங்களுடன் பாடல் பாடி ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு வாசகம் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...